மீமிசல் அருகே வேல்வரை ஆற்றில் மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்.! டிரைவருக்கு வலைவீச்சு.!



மீமிசல் பகுதியில் இரவு நேரங்களில் ஆற்று மணல் கடத்தப்படுவதாக மீமிசல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மீமிசல் அருகே உள்ள வேல்வரை கிராமத்தில் ஆற்றுப்பகுதியில் டிராக்டரில் அனுமதியின்றி மணல் அள்ளியவர்கள், போலீசார் வருவதை கண்டு டிராக்டரை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச்சென்று விட்டனர். 

இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் மகாலிங்கம் என்பவரை தேடி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments