இந்தியா மற்றும் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் 144 ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தியா மற்றும் தமிழகத்தில் தற்போது 5-ஆம் கட்ட 144 ஊரடங்கு அமலில் உள்ளது.
மேலும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகள் மற்றும் தளர்வுகளை பிறப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் காவல் நிலையத்துக்குட்பட்ட கோபாலப்பட்டிணத்தில் மீமிசல் காவல் துறையின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நோன்பு பெருநாள் கொண்டாட்டம் காரணமாக கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில தினங்களாக தோப்பு மற்றும் கடற்கரை இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது, எனவே நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளும் வகையில் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்த்து கொள்ளுமாறு மீமிசல் காவல்துறையின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக தோப்பு மற்றும் கடற்கரை பகுதிகளில் கூட்டம் கூடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கோபாலப்பட்டிணம் ஜமாஅத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.