அறந்தாங்கியில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி




அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தேர்தல் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அறந்தாங்கி தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான அபிநயா தலைமை தாங்கினார். போட்டியில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் சார்பில் 8 அணிகள் கலந்து கொண்டன. இதில் வெற்றி பெற்று முதல் 2 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசு கோப்பை, பதக்கம் வழங்கப்பட்டது. இதில் தாசில்தார்கள் கவியரசு (அறந்தாங்கி), சிவகுமார் (ஆவுடையார்கோவில்), மார்டின் லூதர் கிங் (மணமேல்குடி), ஆவுடையார்கோவில் தனி தாசில்தார் சுரேஷ் மற்றும் ஆவுடையார்கோவில் தேர்தல் துணை தாசில்தார் பாலமுருகன், அறந்தாங்கி தேர்தல் துணை தாசில்தார் சக்கர பாண்டியன், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி தாலுகாவைச் சார்ந்த வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments