புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட கோட்டைப்பட்டினம் மீனவர் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்நிகழ்விற்கு, மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் மதியழகன் முன்னிலை வகித்தார்.
ஆயத்த பயிற்சி மையத்தில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பலூன் உடைத்தல், ரொட்டி கடித்தல், தண்ணீர் பாட்டில் நிரப்புதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் மற்றும் வரைதல் உள்ளிட்ட போட்டிகளில் மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள் சசிகுமார், பன்னீர்செல்வன், இயன்முறை மருத்துவர் செல்வகுமார், சிறப்பு ஆசிரியர்கள் மணிமேகலை, கோவேந்தன், நதியா மற்றும் உதவியாளர் அம்மாபொண்ணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். போட்டிகளில் பங்கேற்ற சிறப்பு மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.