அறந்தாங்கியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம்





அறந்தாங்கியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. 
   புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பேருந்து நிலையம் எதிரில் கே.ராஜேந்திரன் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் தலைமையிலும், மாதர் சங்க மாவட்ட செயலாளர் இந்திராணி, வழக்கறிஞரும், ஓடுக்கப்பட்ட வாழ்வுரிமை இயக்க மாவட்டச் செயலாளர் எஸ்.பி லோகநாதன் ஆகியோர் முன்னிலையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலாளர் ஆ.ராஜேந்திரன் துவக்கி வைத்தார். 
         இயக்க நிர்வாகிகள் கே. தண்டாயுதபாணி விவசாய சங்க ஒன்றிய செயலாளர், ஆர். ராதாகிருஷ்ணன் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர், வழக்கறிஞர் பவிதாரணி மாதர் சங்கம், ஏ. ராஜேந்திரன் சாலையோர வியாபாரி சங்கத் தலைவர், கணேசன் ஆட்டோ சங்கம், ஆர். நித்யா உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் உடுமலை சங்கர் சாதி ஆணவப் படுகொலையை மேல்முறையீடு செய்ய வேண்டும், சாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும், தப்பு செய்த குற்றவாளிகளை தப்பிக்க விடாமல் வழக்கை நடத்த வேண்டும், இளைஞர்களின் காதல் மண உரிமையை பாதுகாத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments