கிருஷ்ணாஜிபட்டினம் மற்றும் P.R பட்டினத்தில் SDPI கட்சியின் 12-வது ஆண்டு துவக்கதின கொண்டாட்டம்.! (படங்கள்)



SDPI கட்சியின் 12-ஆம் ஆண்டு உதய தினமான இன்று 21.06.2020 புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டினம் மற்றும் P.R பட்டினம் கிளை சார்பாக கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கிளை தலைவர் அயூப்கான் தலைமையில் நகர கமிட்டி தலைவர் நைனா முகம்மது அவர்கள் கொடி ஏற்றினார்கள்.

SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் U. செய்யது அஹமது அவர்கள் கொடி ஏற்றி சிறிய விளக்க உரையாற்றினார்.

இறுதி நிகழ்வாக நகர கமிட்டி செயலாளர் அஹமது சலீம் நன்றியுரை நிகழ்த்தினார்.

அதே போல PR.பட்டினம் கிளை சார்பாக கிளை பொறுப்பாளர் STN ஜாஹிர் அவர்கள் கொடி ஏற்றினார்கள்.இந்நிகழ்வில் கிளை நிர்வாகிகள், செயல்வீரர்கள், ஆதரவாளர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.

SDPI கட்சில் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் தலைமையில் சகோதரர் பாலமுருகன் தன்னை கட்சியில் இணைத்து கொண்டார்.

தகவல்: செய்து இபுறாஹீம், SDPI மாவட்ட ஊடக அணி பொறுப்பாளர், கோட்டைப்பட்டினம். 





கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments