SDPI கட்சியின் 12-ஆம் ஆண்டு துவக்கதினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் கோட்டைபட்டினம் கிளை சார்பாக இன்று 21.06.2020 கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் பொது மக்களுக்கு கபசுர குடிநீர், கொரோனா விழிப்புணர்வு நடைபெற்றது.
SDPI கட்சியின் 12-வது ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக கோட்டைபட்டினம் செக்பொஸ்ட் அருகில் SDPI கட்சியின் மாவட்ட செயலாளர் F.முகம்மது சாலிகு அவர்கள் கொடியேற்றி நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் போன்றவை சமூக இடைவெளியை பின்பற்றி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் SDPI கட்சியின் கிளை செயலாளர் சகோதரர். ராஜா முகமது மாவட்ட நிர்வாகி M.முகம்மது அப்துல் காசிம் மற்றும் செயல்வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக காவல் துறை நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தகவல்: செய்து இபுறாஹீம், SDPI மாவட்ட ஊடக அணி பொறுப்பாளர், கோட்டைப்பட்டினம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.