கிழக்கு கடற்கரை சாலையில் வேகமாக பரவி வரும் கொரோனா.!



கோட்டைப்பட்டினத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் வேகமாக பரவி வரும் கொரோனா.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் சென்னையில் இருந்து ஊருக்கு திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது குடும்பத்தை சேர்ந்த மேலும் 7 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதேபோல் ஆவுடையார்கோவில் அருகே முத்துக்குடாவில் ஒருவருக்கும், பொய்யாதநல்லூரை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments