புருனேயில் இருந்து வந்த ராயல் புருனே விமானம் கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதல் முறையாக தரையிறங்கியது.
புருனேயில் இருந்து வந்த இந்த விமானத்தில் மொத்தம் 139 இந்தியர்கள் பயணம் செய்தனர். இதில் ஆண்கள் 101 பேரும், பெண்கள் 31 பேரும், குழந்தைகள் 7 பேரும் என மொத்தம் 139 பேர் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கோவை வந்தடைந்தனர். முன்னதாக ராயல் புருனே ஏர்லைன்ஸ் கடந்த 2004-2005 காலகட்டத்தில் இந்தியாவில் புருனே-கொல்கத்தா-துபாய் இடையே இயக்கப்பட்டது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் துபாய் மற்றும் பிற நாடுகளிலிருந்து சர்வதேச விமானங்கள் இதுவரை தரையிறங்கியுள்ள நிலையில், தற்போது முதல் முறையாக ராயல் புருனே ஏர்லைன்ஸ் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இது தொடர்பாக விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ராயல் புருனே ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 11:55 மணிக்கு கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதாக தெரிவித்தார்.
இந்த விமானத்தில் புருனேயில் இருந்து மொத்தம் 139 இந்தியர்கள் இந்த விமானத்தில் பயணம் செய்ததாக கூறினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விமான சேவை முடக்கப்பட்ட நிலையில் அந்தந்த நாடுகளில் தவித்து வரும் தங்கள் நாட்டு மக்களை அழைத்து வர இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் சிறப்பு விமானங்கள் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.