புருணையிலிருத்து கோவை வந்தடைந்த மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்த தமுமுக





         03.07.2020 கிழக்கு ஆசிய பகுதியில் உள்ள புருணை நாட்டில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு ராயல் புருணை விமானம் வந்தடைந்தது. விமானத்தில் வந்தடைந்தத மக்களுக்கு கோவை வடக்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் பல்வேறு உதவிகளை செய்துக் கொடுத்தனர். அரசு தரப்பு அதிகாரிகளிடம் பேசி விமானத்தில் வந்த கர்ப்பிணி பெண்களை உடனடியாக வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தனியார் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் புருணை மண்டல பொறுப்பாளர் தொண்டி அமீன், மனிதநேய மக்கள் கட்சி கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ஜெம் பாபு, தமுமுக மருத்துவ அணி மாநில துணைச் செயலாளர் ரஃபி மற்றும் நிர்வாகிகள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.



கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments