கத்தாரில் மரணமடைந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவரின் உடல் SDPI முயற்சியால் நல்லடக்கம்!





    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, பனங்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (வயது 46) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக கத்தாரில் பணிபுரிந்து வந்துள்ளார் . கொரோனா நெருக்கடி காரணமாக  வேலை இழந்து கடும் மன உளைச்சலில்  இருந்த அவர் கடந்த ஏப்ரல் 24 அன்று திடீரென உயிரிழந்தார்.

      கொரோனா பரவல் காரணமாக அவரது உடலை தாயகம் கொண்டு செல்ல முடியாமல் கடந்த இரு மாதங்களாக செய்வதறியாமல் திகைத்த நிலையில், கடந்த வாரம் செல்வத்தின் குடும்பத்தினர் SDPI கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளை தொடர்புகொண்டு, இறந்த செல்வத்தின் உடலை கத்தாரில் அடக்கம் செய்ய தங்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

       இதனைத் தொடர்ந்து SDPI கட்சியின் நிர்வாகிகள் கத்தார் இந்தியன் சோசியல் ஃபோரத்தை தொடர்பு கொண்டு இவ்விசயத்தில் உடனடியாக உதவிடுமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்தியன் சோசியல் ஃபோரம் துரிதமாக செயல்பட்டு, கத்தார் உள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகத்தின் உதவியுடன் சட்ட ரீதியான அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு,  குறுகிய கால அளவில் ஒப்புதல் பெற்று, கத்தார் துக்கானில் நல்லடக்கம் செய்தனர்.

      இதையடுத்து தங்களது வேண்டுகோளை ஏற்று செல்வத்தின் உடலை நல்லடக்கம் செய்ய உதவிய SDPI கட்சி மற்றும் இந்தியன் சோசியல் ஃபோரம் நிர்வாகிகளுக்கு செல்வத்தின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments