தலைக்கு மப்பு ஏற.. நண்பர்கள் 2 பேரும் சண்டை போட்டுள்ளனர்.. இதில் ஒருவரை இன்னொருவர் அப்படியே அலேக்காக தூக்கி கீழே போட்டதில் அவர் அப்படியே பேச்சு மூச்சற்று கீழே விழுந்தார். அதிர்ச்சி தரும் இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சென்னைக்கு அருகே பெரியபாளையம் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.. நேற்று முன்தினம் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. ஆனால், அந்த நடுங்கும் வீடியோ இப்போதுதான் வேகமாக பரவி வருகிறது.. அந்த இடம் டாஸ்மாக் கடை அருகே உள்ள ஒரு மைதானம் போல தெரிகிறது.. நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து தண்ணி அடிக்க வந்துள்ளனர்.. அப்போது இருவருக்கு இடையே கடும் சண்டை மூண்டு விட்டது.
நன்றாக குடித்துவிட்டு ரோட்டில் சண்டை போட்டுள்ளனர்.எதற்காக இவர்களுக்குள் சண்டை என தெரியவில்லை.. ஒருத்தருக்கொருத்தர் வலுவாக பிடித்து இழுத்து சண்டையிடுகிறார்கள்.. இதை அங்கிருக்கும் மற்ற குடிமகன்களும் வேடிக்கை பார்க்கின்றனரே தவிர, யாரும் வந்து இவர்களின் சண்டையை விலக்கிவிடவில்லை.
ஒருகட்டத்தில் சண்டை போட்டிருந்தவர்களில் ஒருவர், இன்னொருத்தரை அப்படியே தூக்கி தரையில் ஓங்கி அடிக்கிறார்.. அவர் ஒருபக்கம் சாய்ந்து தரையோடு கவிழ்கிறார்.. அவ்வளவுதான்.. அதற்கு பிறகு அசைவே இல்லை.. அங்கிருந்தவர்கள் அப்போதுதான் அந்த நபரிடம் வந்து இதை பற்றி கேட்கிறார்களே தவிர, கீழே விழுந்தவர் என்ன ஆனார் என்று அருகில் வரவே இல்லை.
கீழே தூக்கி வீசப்பட்ட நபர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்னும் இந்த நாசமா போன குடியால் எத்தனை அக்கப்போரெல்லாம் நடக்கப் போகுதோ.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.