ஆவுடையார்கோவில் அருகே கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் பாய்ந்த கார்; 4 பேர் காயம்.!



ஆவுடையார்கோவில் அருகே கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயம் அடைந்தனர்.


தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பொன்காட்டில் இருந்து கைலாசம் என்பவர் தனது குடும்பத்தினருடன் ஆவுடையார்கோவில் அருகே உள்ள வீரமங்கலம் காமராஜ் நகருக்கு ஒரு காரில் வந்து கொண்டிருந்தார். காரை, கைலாசம் மகன் அன்புராஜ் ஓட்டினார். 

அறந்தாங்கியில் இருந்து வீரமங்கலம் செல்லும் வழியில் உள்ள வெள்ளாற்று பாலத்தின் அருகே கார் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு 10 அடி உயரத்தில் இருந்து கீழே பாய்ந்தது. இதில் அன்புராஜ், காரில் பயணம் செய்த கைலாசம், தனபாக்கியம், ஜெயந்தி ஆகியோர் காயம் அடைந்தனர். 

அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments