புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அறந்தாங்கியில் களப்பக்காடு, எல்.என்.புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் களப்பக்காடு, எல்.என்.புரம் பகுதிகளில் உள்ள சாலை நகராட்சி நிர்வாகம் சார்பில் அடைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற விதிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அறந்தாங்கியில் சமூக இடைவெளி இல்லாமலும், முக கவசம் அணியாமலும் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது.
கொரோனா பரவும் அபாயம்
இது குறித்து அறந்தாங்கியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், அறந்தாங்கி நகராட்சியில் உள்ள பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், விழிப்புணர்வின்றி சுற்றி வருவது அனைவருக்கும் ஆபத்தாகும். அறந்தாங்கி நகராட்சியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்பட 10-க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளுக்கு தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து பண பரிவர்த்தனை செய்கின்றனர்.
ஆனால் வங்கிகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல், வாடிக்கையாளர்கள் கூட்டமாக நின்றும், பெண்கள் தரையில் அமர்ந்தும் இருப்பதை காண முடிகிறது. வங்கி நிர்வாகத்தினர், வேலை பளுவால் சில நேரத்தில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளிவிட்டு, முக கவசம் அணிந்து வருகின்றனரா என்று கவனிக்க தவறுகின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது, என்றார்.
பாதுகாப்பான முறையில்...
புதுக்கோட்டையில் கொரோனா தொற்றால் சில வங்கிகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே அறந்தாங்கி நகராட்சியில் உள்ள அனைத்து வங்கியிலும் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான முறையில் பண பரிவர்த்தனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் நாகுடியில் உள்ள வங்கியிலும் பொதுமக்கள் சமூக இடைவெளி இல்லாமல் கூட்டமாக நின்று பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.