துபாய்: சவுதி அரேபியாவில், இந்த ஆண்டு ஹஜ் பெருநாள் தொழுகையை மசூதிகளில் மட்டுமே நடத்த வேண்டும் என்றும், திறந்த வெளிகளில் நடத்தக்கூடாது எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சகம் அறிவித்துள்ளதாவது: இம்மாத இறுதியில் துவங்கும் ஹஜ் பெருநாளிற்கான சிறப்பு தொழுகையை, மசூதிகளில் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மசூதிகள் அனைத்திலும், கொரோனா பரவலை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். திறந்த வெளிகளில் நடத்தப்படும் திடல் தொழுகைக்கு அனுமதியில்லை. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலால், சவுதி அரேபியாவில் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், மே 31 முதல் கட்டுப்பாடுகளை தளர்த்தி, மசூதிகளை திறந்தது சவுதி அரசு. நாட்டில் உள்ள 90 ஆயிரம் மசூதிகளிலும், கிருமி நாசினி தெளித்து, பாதுகாப்பு வசதிகளுடன் மீண்டும் மசூதிகள் திறக்கப்பட்டுள்ளன
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.