கோட்டைப்பட்டினம் பகுதியில் இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த விசைப்படகுகள் மீது வழக்கு.!



தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ள இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த 2 விசைப்படகுகள் மீதும் மீன்வளத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன்பித்ததாக வந்த தகவலின் அடிப்படையில் மீன்வளத்துறை இன்ஸ்பெக்டர் பாஸ்கர், அமலாகப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் கோட்டைப்பட்டினம் கடல் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். 

அப்போது கடல் பகுதியில் 2 விசைப்படகுகளில் இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்தது தெரியவந்தது. இதையடுத்து 2 விசைப்படகுகள் மீதும் மீன்வளத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments