முதியவரின் மூளையில் இருந்த ரத்த கட்டிகளை அகற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை.!



புதுக்கோட்டை போஸ் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 65). இவர் கடந்த மாதம் 26-ந் தேதி மயக்கம் வந்து கீழே விழுந்ததால் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில் மூளையின் வலது மற்றும் இடது புறத்தில் முன்பக்கம் பக்கவாட்டு பகுதி மேற்பகுதி முதலிய இடங்களில் ரத்தக்கட்டு இருப்பது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்டாலின் ராஜ்குமார் தலைமையிலான குழுவினர் அறுவை சிகிச்சை செய்து ராஜேந்திரன் தலையில் இருந்த ரத்தக்கட்டிகளை அகற்றி சாதனை படைத்தனர். 

அவர் பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பினார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து டீன் மீனாட்சிசுந்தரம் கூறுகையில், “வயதானவர்களுக்கு மூளையின் ரத்த குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு மயக்கம் வந்து, கீழே விழ நேரிடலாம். அப்படி கீழே விழுந்து எந்தவித அறிகுறியும் இல்லாத நோயாளிகள் கூட முன்னெச்சரிக்கையாக சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்து கொண்டு மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. 

ஒரு மாத காலம் இந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 2 கால்களும் சரிவர செயல்படாத நிலையில் தொடர்ந்து வலது கையும் சரிவர இயங்காததால் இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். 

தனியார் மருத்துவமனைகளில் ரூ.9 லட்சம் வரை செலவாக கூடிய இந்த சிகிச்சை இவருக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது” என்றார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments