புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் புதுத்தெருவைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது வயது (40) இவர் அப்பகுதியில் சம்சா வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் சாகுல் ஹமீது கடந்த 10 ஆம் தேதி அவரது ஒன்பது வயது மகன் முகமது சாலிக்குடன் சித்தன்னவாசல் பகுதியிலுள்ள மலையடி குளத்திற்கு குளிக்க சென்றபோது இருவரும் நீரில் முழ்கி உயிரிழந்தனர்.
இந்நிலையில் சாகுல் அமீது இறந்ததால் இவரது மகள் முஸ்பானா சாலிஹா(5) தனது படிப்புக்கான கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்து வந்ததை அறிந்த புதுக்கோட்டை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் அவருக்கு உதவ முன்வந்துள்ளது.
இதையடுத்து முஸ்பானா சாலிஹாவின் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிப்பதற்கு தேவையான முழு கல்வி கட்டணத்தையும் புதுக்கோட்டை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் ஏற்றுள்ளது அதற்கான உறுதிமொழி கடிதத்தையும் முஸ்பானா சாலிஹாவின் தாயிடம் புதுக்கோட்டை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கத்தின் மாவட்ட தலைவர் முகமது இப்ராகிம் வழங்கினார்.
மேலும் அந்த மாணவிக்கு முதற்கட்ட கல்வி உதவி தொகையையும் வழங்கப்பட்டது.
இந்திகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட சூர்யா நற்பணி இயக்க மாவட்ட செயலாளர் ராஜாமணி மற்றும் நற்பணி இயக்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.