புதுக்கோட்டை மாவட்டத்திற்கான வருவாய் தீர்வாயத்திற்கான கோரிக்கை மனுக்களை ஆன்லைன் மூலம் பொது மக்கள் வழங்க 31.07.2020 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்ததாவது:
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு 31.07.2020 நள்ளிரவு 12.00 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், புதுக்கோட்டை மாவட்டத்திற்கான நடப்பு பசலி (1429) வருடத்திற்கான வருவாய் தீர்வாயத்தில் பொது மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை ஆன்லைன் மூலம் https://gdp.tn.gov.in/jamabandhi என்ற இணையதள முகவரியிலும் அல்லது இ-சேவை மையம் மூலம் 29.06.2020 முதல் 15.07.2020 வரை மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
தற்போது மனு அளிக்க 31.07.2020 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஆன்லைன் மூலமாக அளித்து பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பி.உமாமகேஸ்வரி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஜமாபந்தி-உங்களுக்கு பயனான 15 தகவல்கள்:
1.ஜமாபந்தி, ஆண்டு தோறும் மே, சூன் மாதத்தில் வருவாய்த் துறையினரால் கிராமந்தோறும் நடத்தப்படும் கிராம கணக்குகள் குறித்த தணிக்கை (AUDIT) முறையாகும்.
2.இம்முறை ஜமாபந்தி என்ற பெயரால் இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது.
3.இந்த வருவாய் தீர்வாயத்தில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்மற்றும் கிராம நிருவாக அலுவலர் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
குறிப்பு நீங்கள் கொடுக்கக்கூடிய மனுக்கள் அரசு இ சேவை மையத்தில் ஆன்லைன் மூலமாக பதிவு செய்யக்கூடியதாக இருப்பின் கட்டாயம் பதிந்த பின் ஜமாபந்தியில் கொடுங்கள்.
கிராம மக்கள் தாங்களுக்கு சொந்தமான வேளாண் நிலத்தின் உடமைப் பட்டா, சிட்டா, அடங்கல் தங்கள் பெயருக்கு மாற்ற ஆன்லைனில் பதிந்து கொடுங்கள்.
4.மேலும் தங்கள் கிராமத்தில் உள்ள குறைகளை நீக்க முறையிடலாம்.
கல்வி, குடிநீர், நீர் பாசன வாய்க்கால், மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம்.
சொந்த வீட்டு மனை இல்லாதவர்கள் இலவச மனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம்.
வீட்டு மனை மட்டும் உடையவர்கள் வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம்.
5.கிராம மக்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஒய்வூதியம், இலவச அரசு காப்புறுதி அட்டை, வறட்சி நிவாரண நிதி கோருதல், தொடர்பாக ஆன்லைனில் மனுக்களை பதிந்து கொடுங்கள் உடனடி பலனை பெறுங்கள்.
6.இதில் விவசாய நில பட்டா மாறுதல் கோரி, நத்தம் பட்டா மாறுதல் கோரி, வீட்டு மனை பட்டா மாறுதல் கோரி, நில அளவை செய்யக்கோரி, நிலஉட்பிரிவு கோரி மனு செய்யலாம்.
7.பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பத்துடன் கிரயப்பத்திரம், மூலப்பத்திரம், வில்லங்க சான்றிதழ் இணைத்து வழங்கினால் அனைத்து ஆவணங்களும் கிராம கணக்கும் சரியாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக பட்டா மாறுதல் செய்யப்படுகிறது.
8.வீட்டுமனை இல்லாதவர்கள் இலவச வீட்டுமனை கேட்டும் விவசாய நிலம் இல்லாத ஏழைகள் ஒடுக்கப்பட்டவர்கள் இலவச நிலம் கேட்டு விண்ணப்பிக்கலாம்
9.ஜமாபந்தியில் எல்லா அதிகாரிகளையும் ஒரே நாட்களில் சந்திக்கலாம்.சாதாரண அலுவல் நாட்களில் இவை இயலாத விடயம்
10.ஜமாபந்தியில் நம்முடைய மனுக்கள் கையெழுத்தாக வேண்டிய ஒவ்வொரு டேபிளுக்கும் உடனுக்கு உடனே நகர்ந்து விடும்.மற்ற அலுவல் நாட்களில் சீக்கிரம் டேபிள் டூ டேபிள் நகராது.
11.ஜமாபந்தியில் பொதுமக்கள் பணிகள் மட்டுமே முதன்மை பணி ..பிற அலுவல் நாட்களில் வேறு வேறு பணி சுமைகளில் மூழ்கி இருப்பர்.
12.ஜமாபந்தியில் வரும் மனுக்களுக்கு கையூட்டு தொல்லைகள் இருக்காது.
13.ஏழை விவசாயிகளுக்கு போக்குவரத்து, அலைச்சல், அதிகாரிகள் நேரடி ஆய்வு போன்ற நேர, பண விரயங்கள் குறையும்.
14. Proactive (Asset Builders) சொத்து சேர்ப்பவர்கள் ஆண்டுதோறும் வரும் ஜமாபந்தியை உங்கள் சொத்து பராமரிப்பதற்கான வாரமாக ஒதுக்கி கொள்வது நல்லது.
15.தமிழத்தின் அனைத்து தாலுகாக்களிலும் மே &ஜுன் மாதங்களில் ஏதாவது 10 நாட்கள் ஜமாபந்தி நடக்கும் சனி,ஞாயிறு,திங்கள்,அரசு விடுமுறை நாட்ககளில் ஜமாபந்தி நடக்காது.
தொடர்புக்கு:
CMcell Johnson - 9500194395
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.