தமிழக அரசு காவல்துறை சார்பில் கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதில் புதுக்கோட்டை, பொன்னமராவதி, அறந்தாங்கி ஆகிய டிஎஸ்பிக்கள் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டனர். அதனைத்தொடர்ந்து இன்று அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் உயர்திரு பாலமுருகன் அவர்கள் தன்னுடை பொறுப்பை புதிய DSP ஜெ.ஜெயசீலன் அவர்களிடம் ஒப்படைத்து விடைபெற்றுக்கொண்டார்.
எனவே இன்று அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட உயர்திரு ஜெ.ஜெயசீலன் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் அஜ்மீர் அலி, கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது ஆகியோர் சந்தித்து வரவேற்று சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.