அறந்தாங்கி வர்த்தக சங்கத்தின் 83-வது ஆண்டு துவக்கவிழா, 74-ம் ஆண்டு சுதந்திர தினவிழா, கொரோனா பேரிடர்கால பணி செயதவர்களுக்கு விருது வழங்கும் விழா எனும் முப்பெரும் விழா கபசுர குடிநீர் குடித்து துவங்கி சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.
கோரோனா பேரிடர் காலத்தில் பலகட்டங்களாக கபசுர குடிநீர் வழங்கியது, ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட உழைப்பாளர்களுக்கு இரண்டு லட்சத்திற்கு மேல் நிவாரண பொருட்கள் வழங்கியது, நியாயவிலை கடைகளில் மக்களுக்கு சமூக இடைவெளி பணி செய்தது. நகராட்சி நிர்வாகத்தோடு சேர்ந்து கொரோனா அறிகுறி கணக்கெடுப்பு செய்தது. 10 சுமைதூக்கி இயந்திரங்கள் மூலம் நகர் பகுதியில் கிரிமி நாசினி மருந்து தெளித்தது. கொரோனா விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கியது, ஆயிரக்கணக்கான முககவசங்கள் வழங்கியது.
அறந்தாங்கி வர்த்தக சங்க சேவைகளில் பங்குகொண்டு ஒத்துழைப்பு தந்தது என்பன போன்ற சேவைகளை செய்த மனிதநேய ஜனநாயக கட்சியை பாராட்டி அதன் மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி அவர்களுக்கு அறந்தாங்கி வர்த்தக சங்க தலைவர் பா.வரதராஜன் செயலாளர் வி.ஜி.செந்தில்குமார், பொருளாளர் ச.சலிம் ஆகியோர் சால்வை அணிவித்து சான்றிதழோடு கேடையமும் வழங்கினார்கள்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.