கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் வழக்கமாக நடைபெறும், சுதந்திர தின கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஆகஸ்டு 31ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ள நிலையில், நாளை நடைபெறும் 74-வது சுதந்திர தின விழாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பொதுமுடக்கம் காரணமாக, யாரும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக உள் மாவட்டங்களில் அதிகம் உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.