ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் ஒரு வாரத்திற்கு சுயஊரடங்கை கடைபிடிக்க முடிவு.!




புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியில் மீனவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகு மூலம் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜெகதாப்பட்டினம்பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனோ தொற்று அதிகமாக பரவி வருகிறது. எனவே இந்த நோய் பரவலை தடுக்க விசைப்படகு மீனவர் சங்கத்தினர் ஒரு வாரத்திற்கு சுயஊரடங்கை கடைபிடிக்க முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் நேற்று முன்தினம் முதல் கடலுக்கு மீன்பிடிக்கசெல்லவில்லை. வருகிற 23-ந்தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லமாட்டார்கள்.

Post a Comment

0 Comments