மின் விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கி கிடக்கும் கோபாலப்பட்டிணம் தோப்பு சாலை (கலர் கம்பெனி பகுதி).!



கோபாலப்பட்டிணத்தில் கடற்கரை ஈத்கா மைதானம் வழியாக அரண்மனை தோப்பிற்கு செல்லும் சாலையில் உள்ள தெருவிளக்குகள் எரியாததால் தோப்பு சாலை இருளில் மூழ்கியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் கடந்த பத்து நாட்களாக தெரு விளக்கு எரியாமல் இருளிலில் மூழ்கி உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் இரவில் வெளியே வரவே அச்சப்படுகின்றனர். அப்பகுதியை சுற்றிலும் காடுகளாக உள்ளதால் விஷ ஜந்துக்கள் அடிக்கடி குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடுகின்றன. சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளதால் இரவு நேரங்களில் அந்த வழியாக குடிதண்ணீர் எடுத்து செல்லும் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக எரியாத தெருவிளக்குகளை பழுது பார்த்து புதுப்பிக்கும்படி அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த பகுதியை பொறுத்தவரையில் அடிக்கடி தெருவிளக்கு எரிவதில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

தெருவிளக்குகள் எரிய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





Post a Comment

0 Comments