மரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (பெரிய பள்ளிவாசல் தெரு) 1-வது வீதியை சேர்ந்த ஹதியா அம்மாள் அவர்கள்...



கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (பெரிய பள்ளிவாசல் தெரு) 1-வது வீதியை சேர்ந்த மர்ஹும். முகம்மது நெய்னா அவர்களின் மனைவியும், KMM.அஷ்ரப் அலி, KMM.பாவா மரைக்காயர், KMM.அக்பர் தீன், KMM.அப்துல் ஸலாம் ஆகியோரின் தாயாரும் மற்றும் OSM.முகமது அலி ஜின்னா, உதயம் J.தாஹீர், முஹமது ஹனிபா ஆகியோரின் மாமியாருமாகிய ஹதியா அம்மாள் அவர்கள் இன்று 20.08.2020 வியாழக்கிழமை வபாத்தாகிவிட்டார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஜனாஸா நல்லடக்கம் நாளை (21-08-2020 ) வெள்ளிக்கிழமை  காலை 10.00 மணியளவில் கோபாலப்பட்டிணம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)


Post a Comment

0 Comments