மரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் ஜம் ஜம் தெரு (பழைய கலானி தெரு) 1-வது வீதியை சேர்ந்த சபியா அம்மாள் அவர்கள்...



கோபாலப்பட்டிணம் ஜம் ஜம் தெரு (பழைய கலானி தெரு) 1-வது வீதியை  சேர்ந்த S.வருசை முகம்மது அவர்களின் மனைவியும், அபுபக்கர் சித்திக்,பாரூக் அலி,சேக் உஸ்மான்   ஆகியோரின் தாயாருமாகிய சபியா அம்மாள் அவர்கள் இன்று 22.08.2020 சனிக்கிழமை  வபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 22.08.2020 இஷா தொழுகைக்கு பிறகு  8.30 மணியளவில் கோபாலப்பட்டிணம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

Post a Comment

0 Comments