நமணசமுத்திரம் அருகே கட்டைப்பையில் வைத்து வீசப்பட்ட பெண் குழந்தை மீட்கப்பட்டது. குழந்தையின் தாய் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், இளங்குடிப்பட்டி அய்யனார் கோவில் அருகே உள்ள மரத்தடியில் பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று கட்டைப்பையில் வைக்கப்பட்டு வீசப்பட்டு கிடந்தது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், நமணசமுத்திரம் போலீசார் மற்றும் சைல்டு லைன் அமைப்பினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த குழந்தையை மீட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அந்த குழந்தையின் தாய் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தியதில், உள்ளூர் பகுதியில் தற்போது யாருக்கும் குழந்தை பிறக்கவில்லை என்பதும், வெளியூரில் பிறந்த குழந்தையை இங்கு கொண்டு வந்து வீசி சென்று இருக்கலாம் என்று தெரிய வந்தது.
அந்த குழந்தையின் தாயை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், இளங்குடிப்பட்டி அய்யனார் கோவில் அருகே உள்ள மரத்தடியில் பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று கட்டைப்பையில் வைக்கப்பட்டு வீசப்பட்டு கிடந்தது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், நமணசமுத்திரம் போலீசார் மற்றும் சைல்டு லைன் அமைப்பினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த குழந்தையை மீட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அந்த குழந்தையின் தாய் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தியதில், உள்ளூர் பகுதியில் தற்போது யாருக்கும் குழந்தை பிறக்கவில்லை என்பதும், வெளியூரில் பிறந்த குழந்தையை இங்கு கொண்டு வந்து வீசி சென்று இருக்கலாம் என்று தெரிய வந்தது.
அந்த குழந்தையின் தாயை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.