மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்.. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தகவல்.!



இந்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.


சர்வோத்தம் ஜீவன் ரக்‌ஷா பதக்கம் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கும், உத்தம் ஜீவன் ரக்‌ஷா பதக்கம் துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கும், ஜீவன் ரக்‌ஷா பதக்கம் தனக்கு காயம் ஏற்படினும் தாமதமின்றி செயல்பட்டு உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கும் வழங்கப்படும்.

மேற்காணும் 2020-ம் ஆண்டிற்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதுக்கோட்டை மாவட்ட பிரிவில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்து விண்ணப்பங்கள் மற்றும் கையேடுகளை வருகிற 11-ந் தேதிக்குள் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் சமர்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட விருது தொடர்பாக இதர விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தினை தொடர்புகொண்டு பயன் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments