முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்.!



முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். 84 வது வயதில் அவரது உயிர் பிரிந்தது.


பிரணாப் முகர்ஜி கடந்த 9-ந்தேதி தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்தார். எனவே அவர் மறுநாள் டெல்லி ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவரது மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே டாக்டர்கள் 5 மணி நேரம் ஆபரேஷன் செய்து அதை அகற்றினர். ஆனால் ஆபரேஷனுக்குப் பிறகு பிரணாப்பின் உடல்நிலை மோசமடைந்தது. எனவே வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தொடர்ந்து அவரது உடல் நிலை கவலைக்கிடமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் திங்களன்று அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


Post a Comment

0 Comments