கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் கொரோனா தொற்றால் காலமானார்..



கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி காலமானார்.


கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பியான வசந்தகுமார் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என இன்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுமார் 7 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 70 வயதில் உயிரிழந்த அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Post a Comment

0 Comments