உலக இருதய தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், மாமலர் மருத்துவமனை இணைந்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி சங்கத் தலைவர் டாக்டர் க.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.
உலக இருதய தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் “சமுதாயத்திற்காக துடிக்க இதயத்தை பயன்படுத்துங்கள்! அதை உங்களுக்கும் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்கள் அதை பயன்படுத்துங்கள்!!இதுவே இந்த ஆண்டின் இருதய நாளில் நாம் ஏற்கும் உறுதி மொழி!!! என்ற ஸ்லோகத்துடன் சைக்கிள் பேரணி கோர்ட்டு வளாகத்தில் துவங்கி அண்ணா சிலை, கீழராஜவீதி, பிருந்தாவனம், வடக்கு ராஜவீதி, மேலராஜவீதி, அரசு பொது மருத்துவமனை வழியாக புதிய பேருந்து நிலையம் சென்றடைந்தது சைக்கிள் பேரணியை புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முன்னதாக வருகை தந்த அனைவரையும் மாமலர் மருத்துவமனை நிறுவனரும் இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவருமான மருத்துவர் கு.மாரிமுத்து வரவேற்றார். நிகழ்ச்சியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் மாருதி கண. மோகன்ராஜ், பட்டய தலைவர் க.நைனாமுகம்மது, வட்டார வளர்ச்சி துணை அலுவலர் சோ.பார்த்திபன், சைக்கிள் கழக மாவட்ட செயலாளர் அசோகன், சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் ப.செல்லத்துரை முன்னிலை வகித்தனர்.
ஏற்பாடுகளை மாமலர் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவர் க.கதிரவன் செய்திருந்தார். மாமன்னர் கல்லூரி சைக்கிள் பேரணியில் கலந்து கொண்ட மாமன்னர் கல்லூரி தரைப்படை மாணவர்களை பாராட்டி சான்றிதழினை வருவாய் கோட்டாட்சியர் வழங்கித் தஉலக இருதய தின விழப்புணர்வு சைக்கிள் பேரணி புதுக்கோட்டையில் இன்று நடைப்பெற்றது.ந்தார் நிகழ்ச்சியில் TN55 சைக்கிள் குழுவினர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.