மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தி.மு.க. தலைமையில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததால் சட்டம் அமலுக்கு வந்தது. இந்த சட்டங்கள் விவசாயிகளை பாதிக்கும் எனவும், அந்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி தி.மு.க. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் மத்திய அரசு மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்
புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திமுக ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சு.சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார், மாவட்ட அவைத்தலைவர் பொன்துரை,திமுக மூத்த முன்னோடி இரா.துரைமாணிக்கம்,ஒன்றிய செயலாளர் உதயம் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இரா.பாரதிராஜா ஏற்பாடு செய்திருந்தார் இந்நிகழ்ச்சியில் ஆவுடையார்கோவில் ஒன்றிய குழு தலைவர் கா.உமாதேவி, ஒன்றிய குழு உறுப்பினர் செந்தில்குமரன்,செல்வி முருகானந்தம், அஞ்சலி தேவி கார்த்திகேயன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆ.கலைச்செல்வன்,சிறுமருதூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம், மற்றும் திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள மசோதாவிற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.