கொரோனா தொற்று காலத்தில் ‘நீட்’ தேர்வு அவசியமா? எனவும், அதனை ரத்து செய்யக்கோரி புதுக்கோட்டையில் தபால் நிலையம் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நியாஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் தொடர்பான கோஷங்களை எழுப்பினர். மேலும் டாக்டர் உடை அணிந்தப்படியும், மருத்துவர்கள் போன்று கருவிகளை வைத்தப்படியும் ஆர்ப்பாட்டத்தில் ஒரு சிலர் பங்கேற்று முழக்கமிட்டனர்.
மேலும் பிரதமருக்கு கோரிக்கை தபால் கடிதம் அனுப்பினர். அந்த கடிதத்தில், ‘கொரோனா காலத்தில் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. தற்போது ‘நீட்’ தேர்வு அவசியமா? என்பதை ஆராய்ந்து, நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் எழுதியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள், ஆம் ஆத்மி கட்சியினர் உள்ளிட்டோர் கடிதங்களை தபால் பெட்டியில் போட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நியாஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் தொடர்பான கோஷங்களை எழுப்பினர். மேலும் டாக்டர் உடை அணிந்தப்படியும், மருத்துவர்கள் போன்று கருவிகளை வைத்தப்படியும் ஆர்ப்பாட்டத்தில் ஒரு சிலர் பங்கேற்று முழக்கமிட்டனர்.
மேலும் பிரதமருக்கு கோரிக்கை தபால் கடிதம் அனுப்பினர். அந்த கடிதத்தில், ‘கொரோனா காலத்தில் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. தற்போது ‘நீட்’ தேர்வு அவசியமா? என்பதை ஆராய்ந்து, நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் எழுதியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள், ஆம் ஆத்மி கட்சியினர் உள்ளிட்டோர் கடிதங்களை தபால் பெட்டியில் போட்டனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.