ஆலங்குடி அருகே ‘நீட்’ தேர்வுக்கான ஹால்டிக்கெட் வராததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள டி.களபம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் ஹரிஷ்மா (வயது 17). இவர் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
மருத்துவராக விரும்பிய இந்த மாணவி ‘நீட்’ தேர்வுக்காக விண்ணப்பித்து இருந்தார். இந்தநிலையில் அவருடன் இணைந்து விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வந்துவிட்டது. ஆனால் ஹரிஸ்மாவிற்கு ஹால்டிக்கெட் வரவில்லையாம்.
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த, அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது, விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மாணவியின் தந்தை கணேசன் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திறமையான மாணவியான ஹரிஷ்மா, நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராவேன், என்ற கனவில் இருந்து வந்ததாகவும், இந்த கனவை தனக்கு தெரிந்த அனைவரிடமும் கூறி வந்ததாக உறவினர்களும், அவருடைய ஆசிரியர்களும் தெரிவித்தனர். ‘நீட்’ தேர்வுக்கான ஹால்டிக்கெட் கிடைக்காமல் மாணவி ஹரிஷ்மா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள டி.களபம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் ஹரிஷ்மா (வயது 17). இவர் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
மருத்துவராக விரும்பிய இந்த மாணவி ‘நீட்’ தேர்வுக்காக விண்ணப்பித்து இருந்தார். இந்தநிலையில் அவருடன் இணைந்து விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வந்துவிட்டது. ஆனால் ஹரிஸ்மாவிற்கு ஹால்டிக்கெட் வரவில்லையாம்.
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த, அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது, விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மாணவியின் தந்தை கணேசன் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திறமையான மாணவியான ஹரிஷ்மா, நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராவேன், என்ற கனவில் இருந்து வந்ததாகவும், இந்த கனவை தனக்கு தெரிந்த அனைவரிடமும் கூறி வந்ததாக உறவினர்களும், அவருடைய ஆசிரியர்களும் தெரிவித்தனர். ‘நீட்’ தேர்வுக்கான ஹால்டிக்கெட் கிடைக்காமல் மாணவி ஹரிஷ்மா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.