புதுக்கோட்டை நகராட்சி வாரச்சந்தை சந்தைப்பேட்டை பகுதியில் வாரத்தில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக வாரச்சந்தை கடந்த 5 மாதங்களாக நடைபெறாமல் இருந்தன.
தற்போது வாரச்சந்தை செயல்பட நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாட்ஷா உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து 5 மாதங்களுக்கு பிறகு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் வாரச்சந்தை செயல்பட உள்ளது. இதில் காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்பட வீட்டு உபயோகத்திற்கான பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாரச்சந்தை செயல்பட தொடங்கிய நிலையில் ஆட்டுச்சந்தை, மாட்டுச்சந்தை நடைபெறுவது குறித்து நகராட்சி ஆணையர் எந்தவித அறிவிப்பையும் தெரிவிக்கவில்லை.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.