கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர் வலையில் சிக்கிய அதிசய திருக்கை மீன்.!



புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

அவர்கள் வழக்கம் போல் மீன்பிடித்துக் கொண்டு நேற்று கரை திரும்பினர் அப்போது மீனவர் ஒருவரது வலையில் அதிசய திருக்கை மீன் சிக்கியது. இவ்வகை திருக்கை மீன் பொதுவாக ஆழ்கடல் பகுதியில் உள்ளவை. பெரும்பாலும் மீனவர்கள் வலையில் சிக்காது என மீனவர்கள் தெரிவித்தனர்.


Post a Comment

0 Comments