புதுக்கோட்டைக்கு தக்காளி வரத்து கடந்த சில நாட்களாக குறைந்துள்ளது. இதனால் அதன் விலை ‘கிடு கிடு‘ வென உயர்ந்துள்ளது. இதனால், கடைகளில் கிலோ ரூ.50-க்கு விற்பனையாகிறது. சில்லரை விற்பனை கடைகளில் சற்று கூடுதலாக விற்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளி கிலோ ரூ.30 முதல் ரூ.40-க்கு விற்றது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணகிரி உள்பட மாவட்டங்களில் இருந்து தக்காளி மொத்தமாக விற்பனைக்கு கொண்டு வரப்படும் நிலையில் மழையின் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டதால் அதன் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கேரட், பீன்ஸ் போன்ற இங்கிலீஷ் காய்கறிகளின் விலைகளும் சற்று உயர்ந்துள்ளது. புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோவில் சந்து அருகே உள்ள மார்க்கெட்டில் ஒரு கடையில் விற்பனையான காய்கறிகளின் விலைகள் விவரம் கிலோ கணக்கில் வருமாறு:-
கேரட் ரூ.60, பீன்ஸ் ரூ.70, அவரைக்காய் ரூ.50, உருளைகிழங்கு ரூ.40, பீட்ரூட் ரூ.20, சவ்சவ் ரூ.20-க்கு விற்பனையானது.
இதேபோல உழவர் சந்தையிலும் காய்கறிகள் விலை சற்று உயர்ந்துள்ளது. கத்திரிக்காய் ரூ.50-க்கும், வெண்டைக்காய் ரூ.26-க்கும், புடலங்காய் ரூ.20-க்கும், பீர்க்கங்காய் ரூ.40-க்கும், பச்சைமிளகாய் ரூ.60-க்கும், குடைமிளகாய் ரூ.80-க்கும், முள்ளங்கி ரூ.30-க்கும், முருங்கைக்காய் ரூ.70-க்கும், கருணைக்கிழங்கு ரூ.40-க்கும், சின்ன வெங்காயம் ரூ.56-க்கும், பெரிய வெங்காயம் ரூ.34-க்கும் விற்றது. காய்கறிகள் விலையேற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.