வேலையிழப்பு காரணமாக அதிக அளவிலான இந்தியர்கள், சிங்கப்பூர் நாட்டிலிருந்து நாடு திரும்புகின்றனர் என்று இந்திய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தைத் தொடர்ந்து சிங்கப்பூர் தொழில் நிறுவனங்கள் பணியாளர்களைக் குறைத்ததால் அதிகமான இந்திய தொழிலாளர்கள் வீடு திரும்புவதாக இந்திய தூதரக உயர் ஆணையர் பி. குமரன் தெரிவித்துள்ளார். சராசரியாக, சிங்கப்பூரில் இருந்து சுமார் 100 இந்தியர்கள் தினமும் வீடு திரும்ப விமானங்களுக்காக இங்கு உயர் தூதரகத்தில் தொடர்ந்து பதிவு செய்கிறார்கள் என்றும், இதுவரை 11,000 க்கும் மேற்பட்டோர் நாடு திரும்புவதற்காக பதிவு செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
கொரோனா பெருந்தொற்று நெருக்கடிகள் காரணமாக உலகம் முழுவதும் பலவேறு நாடுகளில் வணிகம் மற்றும் தொழில்துறை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல நாடுகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்துக்கொண்டே வருகிறது. இந்
தியாவில், குறிப்பாக தமிழர்கள் அதிகளவில் பணி செய்யும் நாடாக சிங்கப்பூர் உள்ளது. சிங்கப்பூரில் வேலையிழப்புகள் அதிகமானால் அது தமிழக பணியாளர்களை பெருமளவு பாதிக்கும் என்கின்றனர் பொருளாதார ஆய்வாளர்கள்.
தியாவில், குறிப்பாக தமிழர்கள் அதிகளவில் பணி செய்யும் நாடாக சிங்கப்பூர் உள்ளது. சிங்கப்பூரில் வேலையிழப்புகள் அதிகமானால் அது தமிழக பணியாளர்களை பெருமளவு பாதிக்கும் என்கின்றனர் பொருளாதார ஆய்வாளர்கள்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.