புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மேல்மங்கலம் பகுதியில் நேற்று இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மேல்மங்கலத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது 70) என்பவர் கருங்குழிகாட்டு கண்மாயில் ஆடு மேய்த்து கொண்டு இருந்தார். அப்போது அவர் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதேபோல, அறந்தாங்கி அருகே விஜயபுரத்தை சேர்ந்த மெய்யழகு மனைவி முத்துலட்சுமி (42) மற்றும் உறவினர்கள் மகேஸ்வரி (19), மஞ்சுளா(15) ஆகிய 3 பேரும் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வீட்டின் மீது மின்னல் தாக்கியதில் வீடு சேதமடைந்ததுடன் அங்கு தூங்கிக் கொண்டிருந்த 3 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதேபோல மாணவநல்லுரை சேர்ந்த திருநாவுக்கரசர்(60) என்பவர் மைவயல் பகுதியில் வயலில் ஆடு மேய்த்து கொண்டு இருந்தபோது மின்னல் தாக்கியதில் காயம் அடைந்தார். அவர் அறந்தாங்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.