புதுக்கோட்டை, தமிழகத்தில் நிரந்தரமாக நீர் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டக்குழு உறுப்பினர் சந்தோஷ், நிதீஷ் உள்ளிட்டோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு தமிழகத்தில் நீட் தேர்வை முற்றிலுமாக ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தும், நீதி மன்றத்தில் மீண்டும் முறையிட்டும் நீட் தேர்வை ரத்துசெய்ய நடவடிக்கை எடுத்து தமிழக மாணவர்களை பாதுகாக்க வேண்டுமென முழக்கங்கள் எழுப்பப்பட்டன.இதில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.