புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்.!



புதுக்கோட்டை, தமிழகத்தில் நிரந்தரமாக நீர் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டக்குழு உறுப்பினர் சந்தோஷ், நிதீஷ் உள்ளிட்டோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு தமிழகத்தில் நீட் தேர்வை முற்றிலுமாக ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தும், நீதி மன்றத்தில் மீண்டும் முறையிட்டும் நீட் தேர்வை ரத்துசெய்ய நடவடிக்கை எடுத்து தமிழக மாணவர்களை  பாதுகாக்க வேண்டுமென முழக்கங்கள் எழுப்பப்பட்டன.இதில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments