எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேர ‘நீட்‘ என்னும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு அனுமதிக்கப்பட்ட மையங்களில் நேற்று நடைபெற்றது. இந்தநிலையில், ‘நீட்‘ தேர்வுக்கு தயாரான 3 பேர் நேற்று முன்தினம் வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களின் உயிரோடு விளையாடும் ‘நீட்‘ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் புதுக்கோட்டையில் இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் நேற்று நூதன போராட்டம் நடந்தது. அப்போது அவர்கள், சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன் தலைமையில் ‘நீட்‘ என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகத்தை பாடை கட்டி அதனை 4 பேர் கீழ ராஜ வீதியில் இருந்து தூக்கிக்கொண்டு அண்ணாசிலை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, ஊர்வலமாக வந்தவர்களை தடுத்து நிறுத்தி, தங்களது எதிர்ப்பை வேறு வழியில் தெரிவிக்கும்படியும், கொரோனா கால கட்டத்தில் இதுபோன்று போராட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என எடுத்துக் கூறினார்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் முக கவசம் அணியாமல் பங்கேற்றிருந்தனர். அதனையும் சுட்டிக்காட்டிய இன்ஸ்பெக்டர், அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.