அறந்தாங்கியில் உலக தூய்மைப்படுத்தும் தின நிகழ்ச்சி.!



அறந்தாங்கியில் உலக தூய்மை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அவர்களின் உத்தரவின் படியும், நகராட்சி பொறியாளர் மற்றும் ஆணையர் பொறுப்பு அவர்களின் அறிவுரையின் படி இன்று உலக தூய்மைப்படுத்தும் தினம் 19.09.2020 இன்று அறந்தாங்கி நகராட்சி எல்லைக்குள் உள்ள பெரியகடைவீதி புதுக்கோட்டை ரோடு பழைய ஆஸ்பத்திரி ரோடு மற்றும் பேராவூரணி ரோடு பட்டுக்கோட்டை மெயின் ரோடு கூட்டு துப்புரவு பணி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வர்த்தக சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள், பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

மேலும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மூலம் தூய்மை இந்தியா திட்டத்தின் படி வீடுவீடாக மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவது மற்றும் கொரோனா நோய்த் தொற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தவிர்த்தல் மற்றும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்பான கோலப்போட்டி கடைவீதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகிலும் மற்றும் பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகம்  முன்பு நடைபெற்றது.

மேலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி முடிவில் நல்ல முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்திய மகளிர் சுய உதவிக்குழு மற்றும் நல்ல முறையில்  சுத்தம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளருக்கு அறந்தாங்கி உதவி ஆட்சியர் அவர்களால் பரிசளிப்பு நிகழ்ச்சி மற்றும் தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.



Post a Comment

0 Comments