விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் ராங்கியன்விடுதி, தாயினிபட்டி, பி.உசிலம்பட்டி, ஏனாதி, புதுப்பட்டி, கண்ணங்குடி, நம்பூராண்பட்டி மற்றும் கல்லுக்காரன்பட்டி ஆகிய 8 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மாங்குடி, அரசர்குளம் கீழ்பாதி, மேல்நிலைவயல், பொன்னமங்கலம், நடுப்பட்டி, மருதன்கோன்விடுதி, ஒடுக்கூர், கோவனூர், முள்ளூர், திருமயம்-மேலூர், குப்பக்குடி, ஆலங்குடி, மதியநல்லூர், மண்ணக்குடி, மிரட்டுநிலை, பொன்பேத்தி, முதலிப்பட்டி, பள்ளத்துப்பட்டி, எம்.உசிலம்பட்டி, பெருங்களூர், மிதிலைப்பட்டி, எல்.என்.புரம், மாத்தூர், அன்னவாசல்- மேலூர், மறமடக்கி, முனசந்தை, பூவளூர், நத்தமாடிப்பட்டி, முள்ளங்குறிச்சி, பாப்புடையான்பட்டி, மறவாமதுரை, பெருங்கொண்டான்விடுதி, நச்சாந்துபட்டி, மாங்காடு, மேபூதகுடி, முக்கண்ணாமலைப்பட்டி, மேலபட்டு, நல்லாம்பாள்சமுத்திரம், நெப்புகை, ஓடப்பவிடுதி, பெரம்பூர் மற்றும் மேலமேல்நிலை ஆகிய 42 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டங்களுக்கான முதல் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வருகிற 24, 25-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து 2-வது சிறப்பு கிராம சபைக்கூட்டம் அடுத்த மாதம் (அக்டோபர்) 2, 5-ந் தேதிகளில் நடத்தி பயனாளிகள் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், நிலமற்ற விவசாயிகள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு விண்ணப்பம் அளிக்கலாம்.
மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.