புதுக்கோட்டையில் விவசாயிகளுக்கு விரோதமான சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.!



விவசாயிகளுக்கு விரோதமான சட்டத்தை நிறைவேற்றிய பா.ஜ.க. அரசையும், மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படும் மாநில அரசை கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் சின்னப்பா பூங்கா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் தனபதி முன்னிலை வகித்தார்.

இதில், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments