இந்தோனேசியாவை சேர்ந்த ஜெய்லானி, ஷிதி, ரொகானா உள்பட 10 பேர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கொரோனா ஊரடங்கு காலத்தில் உரிய அனுமதியின்றி பள்ளிவாசலில் தங்கி இருந்ததாக எங்கள் மீது ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் கிராம நிர்வாக அதிகாரி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.
இந்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். எங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும். விசாரணையில் நாங்கள் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், “மனுதாரர்கள் இந்தோனேசியாவில் இருந்து இங்கு வந்துள்ளனர். இங்கு மத ரீதியிலான கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ளனர் என்பதை அவர்களே ஒத்துக்கொள்கின்றனர். எனவே அவர்கள் மீதான வழக்கு விசாரணையை மாவட்ட கோர்ட்டு விரைவாக விசாரித்து, ஒரு வாரத்தில் முடிக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.