புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எண்ணெய் வித்து மரப்பயிர் சாகுபடி திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020--21-ம் ஆண்டு வேம்பு மற்றும் புங்கன் மரப்பயிர்கள் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ரூ.4 லட்சத்து 23 மானியம் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 400 வேப்பங்கன்றுகள் நடவு செய்வதற்கு ரூ.17 ஆயிரமும், ஊடுபயிராக உளுந்து சாகுபடி செய்ய ரூ.1000-மும் ஆக ஒரு எக்டருக்கு கூடுதல் மானியம் ரூ.18 ஆயிரம் விவசாயியின் வங்கி கணக்கில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். அதே போல ஒரு எக்டரில் 500 புங்கன் கன்றுகள் நடவு செய்தால் ஊடுபயிர் உளுந்து சாகுபடி உள்பட ரூ.21 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
குழி எடுத்தல், உழவு செய்தல், நல்ல செழிப்பான ஒரு வருட கன்றுகள் வாங்கி நடவு செய்தல், ஊடுபயிர் சாகுபடி செய்தல் போன்ற அனைத்து பணிகளையும் விவசாயி சொந்த செலவின் செய்து களப்பணியாளரது பரிந்துரையுடன் மானியம் கோருதல் வேண்டும்.
மேலும் இந்த திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் வேம்பு மற்றும் புங்கன் நடவு செய்துள்ள விவசாயிகளுக்கு பராமரிப்பு செலவு ரூ.2 ஆயிரம் மற்றும் ஊடுபயிர் உளுந்து சாகுபடிக்கு ரூ.1000 ஆக எக்டருக்கு ரூ.3 ஆயிரம் பின்னேற்பு மானியமாக அந்தந்த விவசாயிகளது வங்கி கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலர் பரிந்துரையுடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.