அறந்தாங்கி அருகே சிலட்டூரில் போதையில் எலி மருந்தை தின்றவர் உயிரிழப்பு.!



அறந்தாங்கி அருகே சிலட்டூர் இந்திரா நகரை சேர்ந்தவர் குமார் (வயது 40). இவருக்கு மது பழக்கம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த அவர், போதையில் ஏதோ ஒரு தின்பண்டத்தை சாப்பிடுகிறோம் என்று நினைத்து எலி மருந்தை (விஷம்) தின்று மயங்கி கிடந்தார். 

இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments