ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி ஒத்ததாளை கடற்கரையில் பெரிய உருளை ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக மீனவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து ராமேசுவரம் கடலோர காவல் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கே கரை ஒதுங்கி கிடந்த உருளையை பார்வையிட்டபோது அது கடலில் மிதக்க விடக்கூடிய மிதவை என்பதும், ரப்பரால் செய்யப்பட்டது என்பதும், 2 டன் எடை கொண்டதும் எனவும் தெரியவந்தது.
இந்த மிதவையானது, பெரிய கப்பல்களை துறைமுக பகுதியில் நிறுத்தும்போது கப்பலின் ஓரப்பகுதி அலையின் வேகத்தால் சேதம் அடையாமல் இருக்க போடப்பட்டு இருக்கும். மேலும் கடல் வழிப்பாதையை அடையாளம் காட்டுவதற்கும் இந்த மிதவை பயன்படுத்தப்படும் என்று கடலோர போலீசார் தெரிவித்தனர்.
இந்த ராட்சத மிதவையானது தூத்துக்குடி துறைமுக கடல் பகுதியிலிருந்து இழுத்து வரப்பட்டதா அல்லது ஆழ்கடல் பகுதியில் இருந்து அலையில் இழுத்து வரப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.