புதிதாக 23 பேருக்கு தொற்று
ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக புதுக்கோட்டை விளங்கி வந்தது. அதன்பிறகு சென்னை உள்பட பிற மாவட்டங்களில் வேலை பார்த்தவர்கள், பிற மாநிலங்களில் வேலை பார்த்தவர்கள் சொந்த ஊர் திரும்பியதால் மெல்ல மெல்ல தொற்று பரவ தொடங்கியது. இடைப்பட்ட மாதங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது. அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் தற்போது தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை 50-க்கும் கீழ் பதிவாகி வந்தது.
நேற்று மேலும் குறைந்து புதிதாக 23 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,301 ஆக உயர்ந்துள்ளது.
நோயாளிகள் இல்லை
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்ததால் கூடுதலாக அமைக்கப்பட்ட தனி சிறப்பு சிகிச்சை மையங்களில் நோயாளிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும் பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலையில் முககவசம் அணியாமல் சென்றவர்களை பிடித்து அபராதம் விதிப்பதுடன், கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.