பொன்னமங்கலம் அருகே மணல் கடத்தியவர் மீது வழக்கு; டிராக்டர் பறிமுதல்.!



புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பொன்னமங்கலம் அருகே மணல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தியபோது அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதன்பேரில், அந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. டிராக்டரை ஓட்டிவந்த புலவன்குறிச்சி பகுதியை சேர்ந்த சேதுபாண்டி (வயது 38) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments